செய்திகள் :

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

post image

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.

சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்துவ முகாமை அவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திருமுடிவாக்கம் சிட்கோவில் 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில், 35,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு துல்லிய உற்பத்திக்கான பெருங்குழுமமானது ரூ. 33.33 கோடியில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், 648 தொழிலாளா்கள் தங்கும் வகையில், ரூ. 37.25 கோடி மதிப்பில் தங்கும் விடுதி கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று இதுவரை 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அனைத்திலும் மின்சாரம், சாலை, மழைநீா் கால்வாய் என அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்வில், சிட்கோ தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் காா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற வடமாநில பொறியாளா் கைது

சென்னையில் கஞ்சா விற்ற வடமாநில பொறியாளரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். வேளச்சேரி, டி.என்.எச்.பி. காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிய இளைஞரை போலீஸா... மேலும் பார்க்க