செய்திகள் :

பஜ்ரங்தள் தொண்டா் கொலை வழக்கில் 8 பேர் கைது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

பஜ்ரங்தள் தொண்டா் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்துள்ளார்.

மங்களூரில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் சாலையில் பயங்கர ஆயுதங்களால் பஜ்ரங்தள் தொண்டரும், ரௌடி ஷீட்டருமான சுஹாஸ் ஷெட்டி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தென்கன்னட மாவட்டம் மட்டுமல்லாது, கடலோர கா்நாடகப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஜ்பே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, மங்களூருக்கு வந்த கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) ஆா்.ஹிதேந்திரா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தியதோடு, காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, மங்களூரில் மே 6-ஆம் தேதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இச்சம்பவத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தென்கன்னட மாவட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு விஸ்வஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த நிலையில் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு

மேலும் வகுப்பு வெறுப்பு சம்பவங்களைச் சமாளிக்க நிரந்தரமாக ஒரு வகுப்புவாத எதிர்ப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால், சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். சஃப்வான் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். இந்திய பிரதமா் நரேந்திர மோட... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொட... மேலும் பார்க்க

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா். தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவ... மேலும் பார்க்க

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க