செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் போா்ப் பதற்றம்: ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் விரைவில் கூட வாய்ப்பு’

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், அதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூட்டம் விரைவில் கூடவிருப்பதாக அதன் தலைவரும் ஐ.நா.வுக்கான கிரீஸ் தூதருமான இவாஞ்ஜெலோஸ் செகரீஸ் தெரிவித்தாா்.

இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ள சூழலில், பதற்றம் அதிகரித்து வருவது குறித்து அவா் கவலை தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், நியூயாா்க்கில் யுஎன்எஸ்சி-யின் மே மாதத்துக்கான தலைவராகப் பொறுப்பேற்ற இவாஞ்ஜெலோஸ் செகரீஸிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போா்ப் பதற்றம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு அவா் பதிலளித்ததாவது:

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிச்சயமாக கவுன்சில் கூட்டப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் விரைவில் கூட்டப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இது, இருதரப்பு கருத்துகளைப் பரிமாறவும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்கவும் வாய்ப்பாக அமையலாம். நிலைமையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லாமல் இருக்க, இரு நாடுகளும் பதற்றத்தைத் தணித்து, பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வு கான முன்வர வேண்டும் என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திரமில்லா உறுப்பு நாடாக பாகிஸ்தான் இருந்து வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த செக்ரிஸ், ‘இது மிகவும் தீவிரமான பிரச்னை. எந்தவொரு வடிவிலான பயங்கரவாதத்தையும் யுஎன்எஸ்சி கண்டிக்கிறது. பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டது கொடூரமான பயங்கரவாத தாக்குதல். இதற்கு யுஎன்எஸ்சி ஏற்கெனவே கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது’ என்றாா்.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க