செய்திகள் :

பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?

post image

மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செயல்படுத்துதல் என்பது அரசின் கடமை.

அதே நேரம், அந்த உணவை தயாரிப்பவர்களின் கவனமும், பொறுப்புணர்வும் அதிஅவசியம். அது தவறும் போது அந்த உணவை நம்பிக்கையோடு உண்ணும் குழந்தைகளின் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகும்.

பீகார்

அதுபோன்ற ஒரு சம்பவம் பீகார் மாநிலதில் நடந்திருக்கிறது. பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள அரசு பள்ளியில், கடந்த 24-ம் தேதி மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய தேசிய மனித உரிமைகள் (NHRC) ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.

அப்போதுதான், சமையல்காரர் உணவில் விழுந்து இறந்த பாம்பை தூக்கி எறிந்துவிட்டு குழந்தைகளுக்கு உணவை வழங்கியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இது உறுதி செய்யப்பட்டால், மாணவர்களின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகள் தொடரப்படும்.

மதிய உணவு

இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்குமாறு பீகார் அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதி... மேலும் பார்க்க

சென்னை: காதலிக்க மறுத்த மாணவி... பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஐடி ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தாழம்பூர் காலல் நிலையம் பின்புறத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மாணவியைச் சந்திக்க அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே-க்கு ஆபாச `மெசேஜ்' அனுப்பியவர் கைது; சைபர் கிரைம் விசாரணை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-க்கு கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு பங்கஜா முண்டேயின் போனுக்கு ஆபாச மெசேஜ்களை... மேலும் பார்க்க

தேனி: இடப்பிரச்னையில் இருவர் வெட்டிக்கொலை; ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது - நடந்தது என்ன?

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் வசித்து வருபவர் சுந்தர் (55). இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இருவருக்கும் கடந்த ஓராண்டாக இடப்பிரச்னை இருந்து வந்த... மேலும் பார்க்க

ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75).இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கொடி: "என்னை விட்டுடுங்க" - சிறுவனைச் சிறுநீர் கழிக்கக் கட்டாயப்படுத்திய கும்பல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.உத்தரப்பிரதேச மாநில அலிகர் பகுதியில் சாலையில் பாகிஸ்தான் கொடி கிடந்திருக்கிறது. அந்த வழ... மேலும் பார்க்க