செய்திகள் :

தேனி: இடப்பிரச்னையில் இருவர் வெட்டிக்கொலை; ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது - நடந்தது என்ன?

post image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் வசித்து வருபவர் சுந்தர் (55). இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இருவருக்கும் கடந்த ஓராண்டாக இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் எதிர் வீட்டுக்காரர் ராஜேந்திரனின் மகன் பார்த்திபன்(31). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் எதிர் வீட்டு குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையம்

இந்நிலையில் நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பார்த்திபன் எதிர் வீட்டு குடும்பத்தாரை அரிவாளால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த எதிர் வீட்டுக்காரர் முத்துமாயன்(70) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயம் அடைந்த சுந்தர் (55) மற்றும் அவரது மனைவி சுதா( 48 ) ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் பார்த்திபன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் தாயார் விஜயா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுமந்தன்பட்டி

இடப் பிரச்சினையின் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதி... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?

மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செ... மேலும் பார்க்க

சென்னை: காதலிக்க மறுத்த மாணவி... பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஐடி ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தாழம்பூர் காலல் நிலையம் பின்புறத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மாணவியைச் சந்திக்க அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே-க்கு ஆபாச `மெசேஜ்' அனுப்பியவர் கைது; சைபர் கிரைம் விசாரணை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-க்கு கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு பங்கஜா முண்டேயின் போனுக்கு ஆபாச மெசேஜ்களை... மேலும் பார்க்க

ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75).இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கொடி: "என்னை விட்டுடுங்க" - சிறுவனைச் சிறுநீர் கழிக்கக் கட்டாயப்படுத்திய கும்பல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.உத்தரப்பிரதேச மாநில அலிகர் பகுதியில் சாலையில் பாகிஸ்தான் கொடி கிடந்திருக்கிறது. அந்த வழ... மேலும் பார்க்க