செய்திகள் :

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

post image

இந்திய பங்குச் சந்தை இன்று(மே 5) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 11 மணியளவில் 449 புள்ளிகள் அதிகரித்து 80,951.28 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் அதிகரித்து, 24,500.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றது.

அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், எம்&எம், பவர் கிரிட், எச்.சி.எல். டெக், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களில் பங்குகள் அதிக லாபத்தில் விற்பனையாகிறது.

கோட்டக் மஹிந்திரா வங்கி, எஸ்.பி.ஐ, எல் அண்ட் டி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

இதையும் படிக்க : வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

ஏப்ரல் மாதத்தில் இரும்புத்தாது உற்பத்தி 15% அதிகரிப்பு!

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான என்.எம்.டி.சி. ஏப்ரல் மாதத்தில், அதன் இரும்புத் தாது உற்பத்தி 15 சதவிகிதமும், விற்பனை 3 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.தேசிய கனிம வளர்ச்சி கழகம் (என்எம்... மேலும் பார்க்க

சிறு நாணய அளவிலான பேட்டரி அறிமுகம்: ஒருமுறை சார்ஜ் செய்தாலே 50 ஆண்டுகள் நீடிக்கும் திறன்!

ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் வாய்ந்த புது வகையான பேட்டரியை மின்னணு பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த பீட்டாவோல்ட் நிறுவனம் அணுசக்தியால் இயங்கும் திறனுள... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் விலை அதிரடி உயர்வு! கேம் பிரியர்கள் அதிர்ச்சி

உலகளவில் விடியோ கேம் பிரியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் எக்ஸ்பாக்ஸ் விலையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் ஆகியவற்றின் விலை அமெரிக்கா... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.85,000 கோடி முதலீடு செய்யும் ஜியோஸ்டார்! யூடியூபை மிஞ்சுமா?

இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் வரலாற்றில் முன்னிருக்கும் பெரிய அறிவிப்பாக, ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 85,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயா... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

மும்பை: ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.வங்கிகளில் சைபர் ப... மேலும் பார்க்க

ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

புதுதில்லி : 'நெட்கியர்' நிறுவனம், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தனது சென்னை சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் குழுவை, 100 நபர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது நெட்ஜியர் இந்தியாவ... மேலும் பார்க்க