செய்திகள் :

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத்

post image

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கைப் பெயிண்டைப் பூச வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையில் புதிய முதலீகள் கொண்டு வரவும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையின் மதிப்பாய்வுக் கூட்டம், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

”பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெறச் செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசுக் கட்டடங்களில் பசு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை பெயிண்டைப் பயன்படுத்த வேண்டும், அதோடு அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

பசு பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பாளர்களை பணியமர்த்தி சரியான நேரத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்குதல், பசுத் தீவனம், தேவையான அளவு தண்ணீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

கால்நடைகள் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் ஆதரவற்ற பசு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் பசுக்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 7,693 பசு மையங்களில் 11.49 லட்சம் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை 21,884 பேருக்கு பசு பராமரிப்பு பயிற்சி வழங்கப்பட்டு மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாள்தோறும் 3.97 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

2025-26 நிதியாண்டில், 4,922 கூட்டுறவு பால் சங்கங்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பரேலியில் கரிம உரம் மற்றும் பசு சிறுநீர் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கனடாவில் மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து காலிஸ்தானியர்கள் பேரணி!

தமிழக மீனவர்களைக் காக்க நடவடிக்கை: பவன் கல்யாண் வேண்டுகோள்!

தமிழக மீனவர்கள் இன்னலகள் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்... மேலும் பார்க்க

சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்தியா, பிரிட்ட... மேலும் பார்க்க

ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே வழக்கமா? அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம்

புது தில்லி: போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொள்வது இது ஒன்றும் புதிதல்ல..... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் பேசிய புதின்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து... மேலும் பார்க்க