செய்திகள் :

Trump : 'தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' - அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கும் படங்களுக்கு 100% வரி

post image

'அமெரிக்காவின் உற்பத்தியை ஊக்குவிக்கிறேன்...', 'அமெரிக்காவின் பொருட்களை ஊக்குவிக்கிறேன்...' போன்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' பிரசார வரிசையில், 'அமெரிக்கப் படங்களும்' தற்போது இடம்பெற்று விட்டன.

நேற்று ட்ரம்ப் அமெரிக்காவில் திரையிடப்படும் அமெரிக்காவில் தயாரிக்கப்படாத படங்களுக்கு 100 சதவிகித வரி விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "அமெரிக்காவின் திரைத்துறை வேகமாக இறந்து வருகிறது. பிற நாடுகள் நமது படத் தயாரிப்பாளர்களையும், ஸ்டூடியோக்களையும் அமெரிக்காவில் இருந்து கொண்டு செல்ல அனைத்து விதமான சலுகைகளையும் தருகின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் மற்றும் பிற பகுதிகள் பெரிதாக அழிந்து வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் நம் தேசத்திற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும், இது ஒரு வகை பிரசாரம் ஆகும். அதனால், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டிற்குள் வரும் படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பை உடனடியாக தொடங்குமாறு வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு உத்தரவிடுகிறேன்.

அமெரிக்காவில் மீண்டும் படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Karl Marx: '21-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்' - கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் பகிர்வு

நவீன உலக வரலாற்றை நான்கு பாகங்களாக எழுதிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம், ‘புரட்சியின் யுகம்: 1789-1848’ என்கிற முதல் பாகத்தை இப்படித் தொடங்குகிறார்: ‘ஆவணங்களைவிட சொற்கள் பல நேரங்களில் உரத்துப் பேசு... மேலும் பார்க்க

'கடல் நாட்டுக்கு சொந்தமானது' - எரிவாயு எடுக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்ப்பதால் காட்டமான பொன்னார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "விகிதாச்சார முறையில் நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவ... மேலும் பார்க்க

`பஞ்சாப்பிற்குள்ளும் பாஜக நுழையும்' - சீக்கியர் கருத்துக்கு ராகுல் காந்தி சொன்ன பதில்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 'ப்ளூ ஸ்டார்' ஆப்ரேஷன் இந்தியா நன்கு தெரிந்ததே. இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் சமீபத்தில் ஒரு சீக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த... மேலும் பார்க்க

Singapore: 1959 முதல் 2025 வரை தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் PAP; என்ன சொல்கிறது வரலாறு?|In Depth

சிங்கப்பூர் என்ற சிறிய நாடு உலக வரைபடத்தில் தனக்கென ஒரு வலிமையான இடத்தை உருவாக்கியுள்ளது. அந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது People’s Action Party (PAP) என்ற ஒரு கட்சியின் நீடித்த, நிலையான ஆட்சி. ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: SC மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த அரசு; விசிக கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களில் 137 பேருக்கு 2001-ம் (அதிமுக ஆட்சி) தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. அப்போது வெறும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. ... மேலும் பார்க்க