செய்திகள் :

Nilgiris: பள்ளி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி பின்னணி..

post image

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 26 வயதான உமேஸ்வரனுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், ஊர்க்காவல் படையில் சில காலமும், வேட்டைத்தடுப்பு காவலராக சில காலமும் பணியாற்றியுள்ளார்.

Child Abuse

அந்த வேலைகளை கைவிட்டுவிட்டு பழங்குடி கிராமம் ஒன்றில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பள்ளி மாணவிகளுடன் தவறான எண்ணத்தில் பேசி, பழகி வந்த உமேஸ்வரன், செல்போன் ரீச்சார்ஜ் செய்ய வரும் மாணவிகளின் செல்போன் நம்பர்களை நோட் செய்தும் தொடர்புகொண்டுள்ளார்.

10 - ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மற்றும் 8 - ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி என 5 சிறுமிகளை மூளைச்சலவை செய்து பாலியில் வல்லுறவுக்கு ஆளாக்கி வந்துள்ளார்.

பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை அறிந்த சிறுமிகள், பெற்றோர் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.

Child Abuse

அதன் அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 5 பழங்குடி சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உமேஸ்வரன் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீஸார் இந்த கொடூரம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "திருமணமானதை மறைத்து சிறுமிகளை மூளைச்சலவை செய்திருக்கிறான். திருமணம் செய்துகொள்வதாக பல ஆசை வார்த்தைகளைச் சொல்லி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்திருக்கிறான்.

sexual abuse

ஒருவருக்கு ஒருவர் தெரியாத வகையில் 5 சிறுமிகளை ஏமாற்றி வந்திருக்கிறான். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

மும்பை நடிகையை சட்டவிரோதமாக 40 நாள்கள் சிறையில் அடைத்த IPS அதிகாரி கைது

மும்பையைச் சேர்ந்த நடிகை காதம்பரி என்பவர் இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிப்படங்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். நடிகை காதம்பரி கடந்த 2023-ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்... மேலும் பார்க்க

`சில கிரிக்கெட் வீரர்கள் நிர்வாணப் படங்களை அனுப்பி...' - `பகீர்' தகவல்கள் பகிர்ந்த அனயா பங்கர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர். இவருக்கும் கிரிக்கெட் உலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் இஸ்லாம் ஜிம்கானாவுக்காக விளையாடியும் ... மேலும் பார்க்க

`பழக விருப்பமில்லை வேண்டாம்’ - மறுத்த பெண்ணை வீடுபுகுந்து வெட்டிய இளைஞன்.. தென்காசி அருகே கொடூரம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் ஊருக்கு அருகே உள்ள பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று ஊர்சுற்ற... மேலும் பார்க்க

`செயற்கை சுவாசம் பொருத்திய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை' - மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்கு

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் நடந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக 46 வயது விமானப்பணிப்பெண் வந்திருந்தார். வந்த இடத்தில் அவர் ஹோட்டலில் தங்கி இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். இதையடுத்து ... மேலும் பார்க்க