செய்திகள் :

மும்பை நடிகையை சட்டவிரோதமாக 40 நாள்கள் சிறையில் அடைத்த IPS அதிகாரி கைது

post image

மும்பையைச் சேர்ந்த நடிகை காதம்பரி என்பவர் இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிப்படங்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை காதம்பரி கடந்த 2023-ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறி மும்பை போலீஸில் புகார் செய்திருந்தார்.

நடிகை காதம்பரி ஜெத்வானி

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயவாடாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் விஜய்சாகர் என்பவர் கொடுத்த நில மோசடி புகாரைத் தொடர்ந்து நடிகை காதம்பரியை ஆந்திரா போலீஸார் மும்பை வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காதம்பரியிடம் எந்த வித விளக்கமும் கொடுக்காமல் அவரையும், அவரது பெற்றோரையும் கைது செய்து விஜயவாடாவிற்கு அழைத்துச்சென்று 42 நாள்கள் காவலில் வைத்திருந்தனர். அந்நேரம் ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சி இருந்தது.

சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி

இதனால் காதம்பரியால் எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு காதம்பரி இது தொடர்பாக மீண்டும் ஆந்திரா போலீஸில் புகார் செய்தார்.

தன்னை சட்டவிரோதமாக கைது செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். கைது செய்யப்பட்ட பிறகு மும்பை தொழிலதிபர் மீது கொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி நிர்ப்பந்தம் செய்ததாகவும், வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் நடிகை குற்றம் சாட்டி இருந்தார்.

அதன் அடிப்படையில் ஆந்திராவில் புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஆஞ்சநேயலு, விஜயவாடா போலீஸ் கமிஷனர் கிராந்தி ரானா, துணை கமிஷனர் விஷால் என மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆஞ்சநேயலு

தற்போது ஆஞ்சநேயலு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஐதராபாத்தில் கைது செய்து விஜயவாடாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆஞ்சநேயலு வாய்மொழியாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் கிராந்தி ரானாவிற்கு நடிகை காதம்பரியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை சரியாக விசாரிக்காமல் கிராந்தி ரானா துணை போலீஸ் கமிஷனர் விஷாலிடம் மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக நடிகை மீது நிலமோசடி பதிவு செய்யப்படும் முன்பு நடிகையை கைது செய்ய மும்பைக்கு போலீஸ் அதிகாரிகள் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாவும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`சில கிரிக்கெட் வீரர்கள் நிர்வாணப் படங்களை அனுப்பி...' - `பகீர்' தகவல்கள் பகிர்ந்த அனயா பங்கர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர். இவருக்கும் கிரிக்கெட் உலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. உள்ளூர் கிளப் கிரிக்கெட்டில் இஸ்லாம் ஜிம்கானாவுக்காக விளையாடியும் ... மேலும் பார்க்க

`பழக விருப்பமில்லை வேண்டாம்’ - மறுத்த பெண்ணை வீடுபுகுந்து வெட்டிய இளைஞன்.. தென்காசி அருகே கொடூரம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் ஊருக்கு அருகே உள்ள பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று ஊர்சுற்ற... மேலும் பார்க்க

`செயற்கை சுவாசம் பொருத்திய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை' - மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்கு

டெல்லி அருகில் உள்ள குருகிராமில் நடந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக 46 வயது விமானப்பணிப்பெண் வந்திருந்தார். வந்த இடத்தில் அவர் ஹோட்டலில் தங்கி இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டார். இதையடுத்து ... மேலும் பார்க்க

பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்' கட்டாயப்படுத்திய ஆசிரியை - போக்சோவில் வழக்கு பதிவு

பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மத... மேலும் பார்க்க

`பாலியல் வன்கொடுமை முயற்சி' - ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளம் பெண்! - என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் 23 வயதுப் பெண் ஒருவர் தன்னுடைய பழு... மேலும் பார்க்க