செய்திகள் :

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி!

post image

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரேஸ் வாகனங்களுக்கு புகழ்பெற்ற கவாஸகி நிறுவனம் நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.7.27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் பைக்கைவிட ரூ.11,000 அதிகமாகும்.

அதே மாடலில் இருந்தாலும், இந்த வகையில் நிறம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் 649cc கொண்டதாகவும், இரட்டை லிக்விட் கூல்ட் இன்ஜின், 67 குதிரைத்திறன் கொண்டதாகவும், ஒரு நிமிடத்திற்கு 6700 முறை சக்கரம் சுழலும் வகையில் 64nm முடுக்குவிசைத் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 வரையிலான கியர் பாக்ஸும் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 41 மில்லிமீட்டர் டெலஸ்கோபிக் போர்க்ஸும், பின்புறத்தில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சஸ்பென்ஸன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 196 கிலோ கிராம் எடையுடன் 15 லிட்டர் பெட்ரோல் டேங்கும் உள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சமாக 4.3 அங்குல டிஎஃப்டி திரை அமைக்கப்பட்டுள்ளது.

இது டிரையம்ப் டேட்டோனா 660 பைக்கிற்கு போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது நிஞ்சா பைக்கின் விலை குறைவுதான். டிரையம்ப் டேட்டோனா 660 ரூ.9.72 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: ஓப்போவுக்கு போட்டியாக விவோ அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்!

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: முதல்வர் கண்டனம்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ’’ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பலி 27 ஆக உயர்வு!

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காமில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு புறப்பட்டார் அமித் ஷா!

சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்குப் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

'நாடாளுமன்றத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை' - உச்ச நீதிமன்றம் குறித்து ஜகதீப் தன்கர் மீண்டும் பேச்சு!

அரசியலமைப்பில் நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். மசோதாக்களை நிறுத்திவைத்ததாகக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத... மேலும் பார்க்க

சௌதி அரேபியாவில் பிரதமர் மோடி! 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு!

சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக... மேலும் பார்க்க