செய்திகள் :

Yuvraj Singh: "என் தந்தையைப் போல பயிற்சியாளராக அல்லாமல் என் மகனுக்கு தந்தையாக இருப்பேன்" - யுவராஜ்

post image

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது தந்தையின் வளர்ப்பு, அவருடனான தனது உறவுமுறை, அவரின் கண்காணிப்பில் தான் மேற்கொண்ட தீவிர கிரிக்கெட் பயிற்சிகள், அந்த அனுபவங்களால் தன் மகன் ஓரியனை (Orion) வளர்ப்பதில் தனது அணுகுமுறையை வடிவமைத்தது குறித்து, சமீபத்திய ஊடக நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த நேர்காணலில், "என் தந்தை யோகராஜ், சில சமயங்களில் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதுண்டு. ஆனால், என் தந்தை எனக்கென அவர் கற்பனை செய்த வாழ்வை, நான் வாழ வேண்டும் என்பதையே அவரது கனவாகக் கொண்டிருந்தார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

நான் அவரது செயல்முறைகளை விரும்பாத காலமும் இருந்தது. இருப்பினும், நமது மனம் விரும்பாதவற்றையும் செய்தால்தான், நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். நான் மிகவும் கட்டாயப்படுத்தப்பட்டுதான் விளையாட வந்தேன். அதன் காரணமாகத்தான் 18 வயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தேன். என் தந்தையுடனான எனது உறவு, முழுமையாக கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தியே அமைந்திருந்தது. எனவே, எனது குழந்தைகள் வாழ்வில் நான் பயிற்சியாளராக வலம் வர விரும்பவில்லை. நான் அவர்களின் தந்தையாக இருக்கவே விரும்புகிறேன். எனது தந்தையுடனான எனது உறவில், நான் செய்ய இயலாமல் போனவற்றையெல்லாம் என் குழந்தைகளுடனான உறவில் என்னால் செய்ய இயலும்.

மனைவி மற்றும் குழந்தைகளுடன் யுவராஜ் சிங்
மனைவி மற்றும் குழந்தைகளுடன் யுவராஜ் சிங்

எனது மகன் ஓரியனுடன் தோழமையான பந்தத்தில் இருக்க விரும்புகிறேன். நான் அனுபவித்த கடுமையான குழந்தை வளர்ப்பு கொள்கையை உடைக்கவே விரும்புகிறேன்" என யுவராஜ் மனம் திறந்து பேசினார்.

மேலும், இந்த நேர்காணலில் கலந்துகொண்ட யுவராஜின் தாயார் ஷாபினம், "யோகராஜ் கடும் பயிற்சிகள் கொடுத்தாலும், யுவராஜ் அது குறித்து எப்போதும் புகார் தெரிவித்ததே இல்லை" எனக் குறிப்பிட்டார்.

Rajasthan Royals: LSG-யிடம் 2 ரன்னில் தோற்றது மேட்ச் பிக்ஸிங்கா? - குற்றச்சாட்டும், RR விளக்கமும்!

சிஎஸ்கே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகளைப் போல நடப்பு ஐ.பி.எல் சீசனில் மோசமாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் அணியும் இணைந்திருக்கிறது. அதிலும், டெல்லி, லக்னோ அணிகளுக்கெதிரான கடைசி இரண்டு ... மேலும் பார்க்க

Dhoni: 'என்னால் சகித்துக்கொள்ள முடியாத வதந்தி அதுதான்...'- தோனி ஓப்பன் டாக்

ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீசனுக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தோனி கலந்துகொண்டிருக்கிறார். அதில், தோனி பற்றி முன்... மேலும் பார்க்க

Dhoni: "தோனி போன்ற ஒரு கேப்டனை பார்க்கவே முடியாது; காரணம்..." - நெகிழ்ந்த அன்ஷுல் கம்போஜ்

தோனி குறித்து சி.எஸ்.கே வீரர் அன்ஷுல் கம்போஜ் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். "தோனி தூரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்தால் கூட நான் அவரையேப் பார்த்துக்கொண்டிருப்பேன். இதற்கு முன்பு அவரை நேரில் சந்தி... மேலும் பார்க்க

CSK: '2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால்..!' - தொடர் தோல்வி குறித்து CEO காசி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. வெறும் இரண... மேலும் பார்க்க

Shubman Gill: `விரைவில் திருமணமா?' - வர்ணனையாளர் கேள்விக்கு வெட்கப்பட்டு பதில் சொன்ன சுப்மன் கில்

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதின... மேலும் பார்க்க

IPL 2025: ``விடுமுறையை கழிக்க வந்திருக்கிறார்கள்'' - சேவாக் விமர்சித்த `வெளிநாட்டு வீரர்கள்' யார்?

முன்னாள் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் விரேந்தர் ஷேவாக், இந்த IPL 2025 சீசனில் சொற்ப ரன்களே எடுத்துவரும் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லை கடுமையாக விமர்சித்துள்ளார். இரண்டு வீரர்களும் இந்த சீ... மேலும் பார்க்க