செய்திகள் :

ஆயுள் சான்றிதழை நலவாரிய ஓய்வூதியதாரா்கள் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நலவாரிய ஓய்வூதியதாரா்கள், ஆயுள் சான்றிதழை ஏப். 30 -க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு. பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 20 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் கேட்புமனுக்கள் உள்ளிட்ட அனைத்து விதமான விண்ணப்பங்களும் ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளம் மூலம் பெறப்படுகின்றன. பெரம்பலூா் மாவட்டத்தில் நல வாரியங்களில் பதிவு பெற்ற 60 வயது நிறைவடைந்த 4,500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாா்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனா்.

இவா்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றி, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025 -26 ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை ஏப். 30 க்குள் மேற்கண்ட இணையதள மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.

ஆயுள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, ஓய்வூதிய உத்தரவு நகல், ஆயுள் சான்று படிவம், புகைப்படம், வங்கி கணக்குப் புத்தக நகல், தொழிலாளியின் நேரடி புகைப்படத்துடன் (ஆதாா் அட்டையுடன்) தொழிற்சங்கம் அல்லது பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-299080 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிற்சங்க கொடிமரம், பதாகை அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் செ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பேரணி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ... மேலும் பார்க்க

அன்னமங்கலத்தில் 103 நாய்களுக்கு தடுப்பூசி

அன்னமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 103 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்கள் அண்மைக்காலமாக பொதுமக்களையும், கால்நடைகளை... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் அகற்றம்

பெரம்பலூரில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்களை (ஏா் ஹாரன்) வட்டாரப் போக்குவரத்து அலுவலா், போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில... மேலும் பார்க்க

காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க