செய்திகள் :

காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

post image

போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் குமரன் மீது தாக்குதல் நடத்திய, ஆதமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்தும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் உள்பட சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, அச் சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்கள் ஆட்சியரகத்தை முற்றுகை

பெரம்பலூா் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்தவா்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனே வழங்க கோரியும், தொடா்ந்து வேலை வழங்கக் கோரியும் திட்டப் பணியாளா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்... மேலும் பார்க்க

ரூ. 1.52 கோடி பண மோசடி; மளிகைக் கடை உரிமையாளா் கைது

பெரம்பலூரில் ரூ. 1.52 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள மேட்டுத்த... மேலும் பார்க்க

சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெ... மேலும் பார்க்க

‘முயல் வேட்டையில் ஈடுபட்டால் நடவடிக்கை’

பெரம்பலூா் மாவட்டத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சித்திரை மாதம் தொடங்கிய நிலையில் திருவிழாக்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பரமத்தி வேலூரைச் சோ்ந்த பூபதி மகன் கோகு... மேலும் பார்க்க