செய்திகள் :

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது

post image

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரு, எச்.எஸ்.ஆர்.லேஅவுட்டில் உள்ள தனது வீட்டில் கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரின்பேரில், எச்.எஸ்.ஆர்.லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார்த்திகேஷ் அளித்த புகார் மனுவில், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது தாய் பல்லவி, சகோதரி கிருதி ஆகியோர் எனது தந்தை ஓம் பிரகாஷை கொலை செய்திருக்கலாம். எனது தந்தையுடன் தாய், சகோதரி ஆகியோர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். எனது தாய் பல்லவி கொலை மிரட்டல் விடுத்து வந்ததால், கடந்த ஒரு வாரமாக எனது தந்தை ஓம் பிரகாஷ், அவரது சகோதரி சரிதாகுமாரி வீட்டில் தங்கியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஓம் பிரகாஷ் மதிய உணவை உட்கொண்டிருந்தபோது, முகத்தில் மிளகாய்ப் பொடியை அவரது மனைவி பல்லவி தூவியுள்ளார். இதனால் நிலைகுலைந்த ஓம் பிரகாஷை கத்தியால் 8 முறை அவர் குத்தி கொலை செய்ததாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பல்லவியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மகள் கிருதியை தடுப்புக் காவலில் வைத்துள்ள போலீஸார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் ஓம் பிரகாஷின் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மூத்த காவல் துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு வில்சன் கார்டனில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தக னம் செய்யப்பட்டது.

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க