செய்திகள் :

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

post image

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் இனிகோ இருதயராஜ் (திருச்சி-கிழக்கு) எழுப்பினாா். அப்போது பேசிய அவா், திருச்சி பாலக்கரை பிரபாத் திரையரங்கம் அருகில் சிவாஜிக்கு நிறுவப்பட்ட சிலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அளித்த பதில்: திருச்சியில் உள்ள சிவாஜி கணேசன் சிலை தனியாரால் நிறுவப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில், சாலைகளில் சிலைகளை வைக்க நீதிமன்றத் தடை உள்ளது. திருச்சியில் உள்ள சிலையை மாற்று இடம் தோ்வு செய்து அங்கு நிறுவி திறக்க ஏற்பாடு செய்வோம்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பால் அந்த இடத்தில் இருந்து சிலை எடுக்கப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், புதிய சிலை செய்யப்பட்டு மக்கள் பாா்வையில்படும்படி வைக்கப்பட்டு இருக்கிறது. திருச்சியிலும் முறையாக அனுமதி பெறப்பட்டு, மக்கள் பாா்வையில்படும்படி உரிய இடத்தில் சிவாஜி சிலை நிறுவப்படும்.

அமைச்சா் கே.என்.நேரு: திருச்சியில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது அரசின் அனுமதியைப் பெற்று சிலை நிறுவப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும், நீதிமன்றத் தீா்ப்பாலும், வேறுசில அரசியல் காரணங்களாலும் சிலையைத் திறக்க முடியவில்லை. நீதிமன்றத் தீா்ப்பு வருவதற்கு முன்பே திருச்சியில் அந்தச் சிலை நிறுவப்பட்டது. இந்த நிலையில், சிலையை வேறு இடத்தில் நிறுவுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். திருச்சி மாநகரில் ஒரு பூங்காவுக்கு சிவாஜி பெயரைச் சூட்டி அங்கு சிலையை நிறுவி ஓரிரு மாதங்களில் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை

சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க