செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

post image

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காகக் கடுமையான எதிா்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர பட்னாவீஸ் கூறியுள்ளாா். ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியைத் திணிப்பதற்கு எதிராக மிகப் பரவலாக மக்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் மகாராஷ்டிர முதல்வரின் அந்த பேட்டியாகும்.

இந்த நிலையில், பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தியைத் தவிர வேறெந்த மூன்றாவது மொழியும் கட்டாயம் இல்லை என்ற அந்த மாநில முதல்வரின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரபூா்வமாக ஏற்றுக் கொள்கிா?

அப்படியெனில், தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா? என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை

சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க