செய்திகள் :

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

ராகுல் காந்தி தனது பிரிட்டன் குடியுரிமையை மறைத்ததாகவும் இக்குற்றச்சாட்டில் அவரின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து கா்நாடக பாஜகவை சோ்ந்த எஸ்.விக்னேஷ் சிசிா் பொதுநல வழக்கு தொடுத்தாா்.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க நீதிபதிகள் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் உத்தரவிட்டிருந்தனா்.

அதன்படி, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான் மசூதி, ராஜீவ் சிங் ஆகியோா் அடங்கிய லக்னௌ அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு இத்தகவலை சமா்ப்பித்தது.

மத்திய அரசு சாா்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.பி.பாண்டே, இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ள ராகுல் காந்தியின் பிரிட்டன் குடியுரிமை குறித்து அந்நாட்டு அரசிடம் சம்பந்தப்பட்ட அமைச்சகம் விவரங்களைக் கோரியுள்ளது. எனவே, வழக்கில் இறுதி முடிவெடுக்க அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

இதையடுத்து, வரும் மே 5-ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க