செய்திகள் :

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலைவர்

post image

கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஏப். 21 ஆம் தேதி ஆட்சிப் பணிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சிப் பணிகள் தினத்தையொட்டி அனைத்து ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அரசுப் பணியில் உங்களது பங்கும். கொள்கைகளை வகுப்பதில் உங்களின் பங்களிப்பும் குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டன.

தேசம் தனது இலக்குகளை நனவாக்கிக் கொள்ளவும் நல்லாட்சியில் புதிய சாதனைகளைப் படைக்கவும் நீங்கள் முக்கிய பங்காற்ற வாழ்த்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் ஆட்சிப் பணிகள் தினத்தையொட்டி அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இச்சங்கம், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஆட்சிப் பணிகள் தினத்தில் வலுவான இந்தியா என்ற சர்தார் படேலின் லட்சியக் கண்ணோட்டத்தை அடைய நம்மை நாமே அர்ப்பணிப்போம்.

அவரது கொள்கைகளின்படி தேசத்துக்கு பெருமிதத்துடன் பணியாற்ற உறுதியேற்போம் என்று தெரி வித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை: நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

புது தில்லி: ‘இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கைகொள்கிறேன். ஆனால் சிலருக்கு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல மத அ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ் நக்வி

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தில் நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி... மேலும் பார்க்க

மேற்கு வங்க ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக அந்த மாநில ஆளுநா் மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறு... மேலும் பார்க்க