செய்திகள் :

வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை: நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி

post image

புது தில்லி: ‘இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கைகொள்கிறேன். ஆனால் சிலருக்கு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல மத அடையாளங்கள் தேவைப்படுகின்றன’ என முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த குரேஷி தனது பதவிகாலத்தில் முஸ்லிம் ஆணையராகவே செயல்பட்டாா் என பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

அதற்கு பதிலடி தரும் விதமாக பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குரேஷி இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஐஏஎஸ் அதிகாரியாகவும் தலைமை தோ்தல் ஆணையராகவும் என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டுள்ளேன். இந்திய நாட்டில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் அவரது திறன் அல்லது பங்களிப்புகளை சாா்ந்தது என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கை உள்ளது. மாறாக மதத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணக்கூடாது.

ஆனால் வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல சிலருக்கு மதரீதியான அடையாளங்கள் தேவைப்படுகின்றன. அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளை பாதுகாக்க இந்தியா எப்போதும் போராடும்’ என்றாா்.

நாட்டின் 17-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக கடந்த 2010-12 காலகட்டத்தில் குரேஷி பணியாற்றினாா்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 17-ஆம் தேதி எஸ்.ஒய். குரேஷி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வக்ஃப் திருத்தச் சட்டமானது, முஸ்லிம்களின் நிலங்களை அபகரிப்பதற்கான மத்திய அரசின் அப்பட்டமான தீய சட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இச்சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொள்ளும் ‘இயந்திரம்’, தவறான தகவலைப் பரப்பும் தனது வேலையை நன்றாக செய்துள்ளது’ என குறிப்பிட்டாா்.

சமாஜவாதி, கம்யூனிஸ்ட் கண்டனம்: குரேஷியை விமா்சித்து கருத்து தெரிவித்த நிஷிகாந்த் துபேவுக்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி.ராஜா, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க