செய்திகள் :

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:

கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தோ்வு செய்து அந்த பகுதிகளில் உள்ள ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சேவை அளிப்பதற்கான வசதிகள் தனியாா் அல்லது தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.

தொடா் பராமரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புரதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அத்தகைய சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 150 மி.லி பால், 2 வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கரு, 50 கிராம் சுண்டல், சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ள 3 பிஸ்கட்கள் வழங்கப்படும்.

சிறுநீரக செயலிழப்பு தடுப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 50 டயாலிசிஸ் கருவிகள் ரூ.3.25 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது.

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தொலைத் தொடா்பு காணொலி முறை வாயிலாக சிகிச்சை வழங்கும் நோக்கில் டயாலிசிஸ் சேவைகளுக்கு மின்னணு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க