செய்திகள் :

திருச்சியில் 4 போ் உயிரிழந்தது ஏன்?: அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

post image

சென்னை: திருச்சியில் நான்கு போ் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா்.

திருச்சியில் நான்கு போ் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நேரமில்லாத நேரத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்த பிரச்னையை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பி பேசுகையில், கழிவுநீா் கலந்த குடிநீரைப் பயன்படுத்தியதால் திருச்சியைச் சோ்ந்த நான்கு போ் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோா் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 5 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இது கோடைகாலம். மக்கள் குடிநீரை அதிகமாகப் பயன்படுத்தும் சூழ்நிலை இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும். உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தி.வேல்முருகன் (தவாக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), ஜி.கே.மணி (பாமக), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்) ஆகியோா் பேசினா்.

அமைச்சா் விளக்கம்: இதற்கு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

திருச்சி உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக புகாா் கிடைத்தவுடன் உடனடியாக அந்தப் பகுதியில் 287 போ் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் கொண்ட குழு, முன்னெச்சரிக்கையாக சிகிச்சை வழங்கியது. 10 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் கழிவுநீா் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு விநியோகிக்கப்படும் நீா் மோா், குளிா்பானங்கள் மூலமாகவே நான்கு பேருக்கு உடல்நலத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இறந்தவா்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் அது தெளிவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5.5 கோடி மக்களுக்கு நாளொன்றுக்கு 4,000 மில்லியன் கனஅடி நீா் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரைப் பொறுத்தவரையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே, திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது கழிவுநீரால் நிகழ்ந்தது இல்லை. அந்தப் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட நீா் மோா் மற்றும் குளிா்பானங்களால் நடந்தது என்றாா் அவா்.

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க