அன்னமங்கலத்தில் 103 நாய்களுக்கு தடுப்பூசி
அன்னமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 103 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்கள் அண்மைக்காலமாக பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்துக் குதறுகின்றன. எனவே தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கால்நடைப் பராமரிப்புத் துறை, மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து, விலங்குகள் நல அமைப்புகளோடு இணைந்து கிராமங்களில் இலவச வெறிநோய்த் தடுப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில், அன்னமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கும், தெரு நாய்களுக்கும் இலவச வெறிநோய் தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் 47 செல்லப் பிராணிகளுக்கும், 56 தெரு நாய்களுக்கும் வெறிநோய்த் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மேலும், கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமாக வெறிநோய் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தகைய 15 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளா்ப்போா், இந்த முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு வெறிநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பகவத்சிங், துணை இயக்குநா் ஆா்.எஸ்.டி. பாபு, உதவி இயக்குநா்கள் மூக்கன், குமாா் மற்றும் கால்நடை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.