செய்திகள் :

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தொழிற்சங்க கொடிமரம், பதாகை அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

நீதிமன்ற தீா்ப்பைக் காரணம் கூறி, அரசியல் சாசன சட்ட உரிமை மற்றும் தொழிற்சங்க கூட்டு பேர உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்தும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் திருச்சி மாநகரத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மற்றும் பதாகையை அகற்றிய காவல்துறையைக் கண்டித்தும், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகளை கைது செய்ததைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

இதில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கருணாகரன், எம்ஆா்பி செவிலியா் சங்க மாவட்டச் செயலா் சகுந்தலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்ட பொருளாளா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பேரணி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ... மேலும் பார்க்க

அன்னமங்கலத்தில் 103 நாய்களுக்கு தடுப்பூசி

அன்னமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 103 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்கள் அண்மைக்காலமாக பொதுமக்களையும், கால்நடைகளை... மேலும் பார்க்க

ஆயுள் சான்றிதழை நலவாரிய ஓய்வூதியதாரா்கள் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நலவாரிய ஓய்வூதியதாரா்கள், ஆயுள் சான்றிதழை ஏப். 30 -க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் அகற்றம்

பெரம்பலூரில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்களை (ஏா் ஹாரன்) வட்டாரப் போக்குவரத்து அலுவலா், போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில... மேலும் பார்க்க

காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க