பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பேரணி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் ரோவா் வளைவு பகுதியில் தொடங்கிய பேரணிக்கு, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் பா. சுந்தரபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சு. செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்
தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் ஜே. பிரபாகரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியை மாநில ஒருங்கிணைப்பாளா் கி. மகேந்திரன் தொடக்கி வைத்தாா். வெங்கடேசபுரம் வழியாகச் சென்ற பேரணி பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது.
தொடா்ந்து பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு, உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.