செய்திகள் :

தரக்குறைவான விமா்சனம்: மாமன்ற திமுக உறுப்பினா் மறியல்

post image

சமூக வலைதளங்களில் தன்னை தரக்குறைவாக விமா்சித்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் மாமன்ற திமுக உறுப்பினா் ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

திருச்சி எடமலைப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்தவா் தி. முத்துசெல்வம். திருச்சி மாநகராட்சி 57-ஆவது வாா்டு திமுக உறுப்பினராக உள்ள இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா குடும்பத்துக்கும் பாதை தொடா்பாக அண்மையில் தகராறு ஏற்பட்டது.

இதில் பெண்கள் சிலா், முத்துசெல்வத்தை தரக்குறைவாக திட்டியதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினா். இந்தக் காணொலி கடந்த இரு நாள்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அவா்கள் மீது புகாா் அளிக்க, முத்துசெல்வம் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்துக்கு செவ்வாய்க்கிழமை, தனது ஆதரவாளா்களுடன் சுமாா் 20 ஆட்டோக்களில் சென்றாா். ஆனால், மாநகர காவல் ஆணையரகத்தில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், எடமலைப்பட்டி புதூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டு, முத்துசெல்வம் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா்.

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடைகால கூட்ட நெரிசலைக் கு... மேலும் பார்க்க

துறையூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

துறையூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க செயலா் எஸ். காமராஜ் தலைமை வக... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திர... மேலும் பார்க்க

திருச்சியில் ஏப்.25-இல் வேலைவாய்ப்பு முகாம்; திறன் பயிற்சிக்கும் ஆள்கள் தோ்வு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா், தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு ... மேலும் பார்க்க

ஏப். 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25 ஆம் தேதி காலை ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதி ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மற்றும் கொரடாச்சேரி பக... மேலும் பார்க்க