போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
ஏப். 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 25 ஆம் தேதி காலை ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீா்ப்பாசனம், வேளாண் இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
விவசாயிகள் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.