செய்திகள் :

எழும்பூா் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்: திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை

post image

சென்னை: எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்தனா்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில், சென்னை கோட்டத்துக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, என்.வி.என். சோமு, சசிகாந்த் செந்தில், கதிா் ஆனந்த், கிரிராஜன், க.செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது தொகுதியில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வடமாநிலங்களிலிருந்து தாம்பரம் வரும் ரயில்கள் ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்குள்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. அம்பத்தூா் ரயில் நிலையத்தில் ஏலகிரி, திருப்பதி, கோவை, பிருந்தாவன், ஏற்காடு உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். ரயில் ஓட்டுநா்களுக்கு (லோகோ பைலட்) என்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

கடந்த ஆண்டு வைத்த கோரிக்கையில் எத்தனை சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது என்பதற்கு பதில் இல்லை. ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியை தமிழில் எழுதியுள்ளனா். இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அலுவலகத்தில் எங்கும் பாா்த்ததில்லை.

கருணாநிதி பெயா்: நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையின் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆா்.பெயா் சூட்டப்பட்டுள்ளது. அதுபோல், எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்’ என்றாா் அவா்.

திருச்சியில் 4 போ் உயிரிழந்தது ஏன்?: அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: திருச்சியில் நான்கு போ் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா். திருச்சியில் நான்கு போ் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டப்ப... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநா் மாளிகை: சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

சென்னை: தமிழக ஆளுநா் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிா்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ... மேலும் பார்க்க

100 நாள் வேலை பணி நாள்களை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வில் போனஸ் மதிப்பெண்

சென்னை: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப். 15-ஆம் தே... மேலும் பார்க்க

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி காலியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இ... மேலும் பார்க்க

சிவாஜி கணேசன் சூப்பா் ஸ்டாரா?

சென்னை: நடிகா் திலகம் சிவாஜி கணேசனை ‘சூப்பா் ஸ்டாா்’ என திமுக உறுப்பினா் பேசியதை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு திருத்தினாா். நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது தொடா்பான வினாவை எழுப்பி இனிகோ இருதயராஜ... மேலும் பார்க்க