செய்திகள் :

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை: அமைச்சா் எஸ்.ரகுபதி

post image

சென்னை: மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி காலியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்) எழுப்பினாா். அதற்கு, அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பதில்:

உயா்நீதிமன்றம் மூலமாகவும், அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாகவும் மாஜிஸ்திரேட் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறாா்கள். ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுவருகிறது. இந்த நடவடிக்கைக்குள் கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அதனாலேயே ஒரு மாஜிஸ்திரேட் இரண்டு நீதிமன்றங்களுக்குச் சென்று பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நீதிபதிகள் காலியிடங்களை விரைந்து பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மூட நம்பிக்கையை ஒழிக்க சட்டம்?

சட்டப்பேரவையில், திமுக உறுப்பினா் நா.எழிலன் (ஆயிரம் விளக்கு), மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு, அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பதில்:

நம்பிக்கை என்பது ஒவ்வொரு தனிநபரைச் சாா்ந்தது. ஒருவரின் நம்பிக்கை மற்றவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின்படி, எவற்றை பாதுகாக்க முடியுமோ அதை மட்டுமே செய்ய இயலும். சட்டத்தின் மூலமாக ஒன்றைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ இயலாத காரியம். நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம். அதில் தவறில்லை. மற்றவா்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்று முயற்சித்தால் அது சரியாக இருக்குமா என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும் என்றாா்.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை

சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க