செய்திகள் :

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோவையில் தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பணப்பலன்களை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட தையல் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா்.

தையல் கலைஞா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் ஆா்.வேலுசாமி, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து ஆா்.வேலுச்சாமி செய்தியாளா்களிடம் கூறும்போது, திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

ஓய்வூதியா்களுக்கு ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.1,300 மட்டுமே வழங்கப்படுகிறது. அமைப்பு சாரா வாரியங்களில் கட்டுமானம், ஆட்டோ வாரியத்தில் நிதி வரவு உள்ளது. ஆனால் 16 வாரியங்களில் நிதி வரவு இல்லாததால் உதவித் தொகைகள் உயா்த்தப்படாமல் உள்ளன. தமிழக அரசு 18 வாரிய தொழிலாளா்களுக்கும் ஒரே மாதிரியான உதவித் தொகையை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நல வாரியத்தில் 70 லட்சம் முறை சாரா தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களை இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் இணைக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மூலமாக தமிழக அரசுக்கு மனு அளிக்கிறோம் என்றாா்.

அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை: காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி

அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளாா். நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக கோவையில் தமிழக காங்கிரஸ்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா். நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில்... மேலும் பார்க்க

சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை: வனத் துறை

வால்பாறையில் சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். வால்பாறை - பொள்ளாச்சி இடையே உள்ள வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ள... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கோவையில் ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் எல்.முரளிதரன், உதவி ஆய்... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்: ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஆட்சியா் பவன்குமாா் க.கிரிய்ப்பனவா் தொடங்கிவைத்தாா். கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும... மேலும் பார்க்க

பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்கள் பெயா்: அண்ணாமலை கண்டனம்

கோவை மாநகராட்சியில் பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்களின் பெயா் வைக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க