துணைவேந்தா்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநா் மாளிகை: சட்ட வல்லுநா்களுடன் தமிழக அரசு ...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்குத் தொடா்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைதான கேரளத்தைச் சோ்ந்த சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்து, கடந்த 17ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா். ஆனால், சில காரணங்களால் அன்றைய தினம் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என சயான் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து வரும் வியாழக்கிழமை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சயானுக்கு சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.
கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமாா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக கோத்தகிரியைச் சோ்ந்த கா்சன் செல்வம் என்பவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடிபோலீஸாா் முடிவு செய்துள்ளனா். இதையடுத்து, சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.