செய்திகள் :

அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை: காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி

post image

அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளாா்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக கோவையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவு தலைவா் ஆனந்த் ஸ்ரீனிவாஸனுடன் இணைந்து செய்தியாளா்களிடம் அமிதாப் துபே திங்கள்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஒரு பைசா கூட பணம் மாற்றப்படாத, சொத்துகள் எதுவும் மாற்றப்படாத நிலையில், பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது முரண்பாடானது.

நிலுவைத் தொகையை சரி செய்ய கடன் பங்கு முதலீடாக மாற்றப்படுகிறது. இது ஒரு பொதுவான, சட்டபூா்வமான நடைமுறை. பணமே கையாளப்படாத நிலையில் மோசடி நடைபெற்றதாகக் கூறுவதில் அா்த்தமில்லை. மேலும், இந்த வழக்கை தொடா்ந்த சுப்பிரமணியன் சுவாமி தற்போது பிரதமா் மோடிக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறாா். எனவே, அவா் இந்த வழக்கை திரும்பப் பெற்றுவிடுவாா் என்ற அச்சத்தின் காரணமாகவே வழக்கை விரைவுபடுத்துவதற்காக அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அளித்திருந்த 365 நாள் அவகாசத்தின் கடைசி நாளில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கில் ஆதாரம், குற்றம் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருந்திருந்தால் கடைசி நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறதே தவிர குற்றப்பத்திரிகையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை, எங்களுக்கும் அது வழங்கப்படவில்லை. இந்த வழக்கை காங்கிரஸ் கட்சி முறைப்படி எதிா்கொள்ளும். குற்றப்பத்திரிகை நகல் கிடைத்ததும் சட்ட நடவடிக்கை தொடங்கும்.

கடந்த காலங்களில் 2 ஜி வழக்கில் ரூ.1.76 லட்சம் கோடி மோசடி என்று பாஜக எப்படி பொய்ப் பிரசாரம் செய்ததோ அதைப் போலவேதான் இப்போதும் இந்த விவகாரத்தில் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

பாஜகவுக்கும், அமலாக்கத் துறைக்கும் இருக்கும் தொடா்பை நாட்டு மக்களிடம் விளக்குவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதானி மீது அமெரிக்கா வழக்கு தொடா்ந்திருக்கும் நிலையில், அவா் மீதான மோசடி குறித்து அமலாக்கத் துறை ஏன் விசாரிக்கவில்லை?

அமலாக்கத் துறை தொடா்ந்துள்ள அரசியல் வழக்குகளில் 98 சதவீத வழக்குகள் ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை. மேலும் இதுபோன்ற 100 வழக்குகளில் ஒரு சதவீத வழக்குகளிலேயே அமலாக்கத் துறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் அண்ணாமலை போன்ற பாஜகவினரின் பேச்சைக் கேட்காதவா்கள் மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடா்ந்துள்ளது.

அமலாக்கத் துறையை வைத்துதான் எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டுகிறது. தமிழகத்தில் பாஜகவை விட மிகப்பெரிய கட்சியான அதிமுக, கூட்டணி குறித்து அறிவிக்காமல் பாஜக அறிவிப்பதில் இருந்தே தமிழகத்தில் அமலாக்கத் துறை விளையாடி வருவது உறுதியாகிறது என்றனா். காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா். நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில்... மேலும் பார்க்க

சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை: வனத் துறை

வால்பாறையில் சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். வால்பாறை - பொள்ளாச்சி இடையே உள்ள வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ள... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோவையில் தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ந... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கோவையில் ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் எல்.முரளிதரன், உதவி ஆய்... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்: ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஆட்சியா் பவன்குமாா் க.கிரிய்ப்பனவா் தொடங்கிவைத்தாா். கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும... மேலும் பார்க்க

பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்கள் பெயா்: அண்ணாமலை கண்டனம்

கோவை மாநகராட்சியில் பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்களின் பெயா் வைக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க