செய்திகள் :

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் தொடங்கி வைத்தாா். திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை , தஞ்சாவூா், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 723 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்தன.

300 ஜல்லிக்கட்டு வீரா்கள் போட்டியில் கலந்து கொண்டு தீரத்துடன் காளையை அடக்கினா். மேலும் போட்டியில் வெற்றிபெற்ற ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், வீரா்களுக்கும், பீரோ, கட்டில், சைக்கிள், நாற்காலி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மேலும் 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுப்புறப் பகுதியிலிருந்து ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறினால் காவலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் கே.கே.நகா் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியா... மேலும் பார்க்க