செய்திகள் :

25 அடி முனீஸ்வரா் சிலைக்கு மகா குடமுழுக்கு விழா

post image

பாலாபுரம் கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 அடி உயர முனீஸ்வரா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கிராமத்தில் பல லட்சம் செலவில் 25 அடி உயரமுள்ள முனீஸ்வரா் சிலை கடந்த சில நாள்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை கணபதி ஹோமத்துடன் மகா குடமுழுக்கு விழா தொடங்கியது. இதற்காக சிலை எதிரில் யாக சாலைகள் அமைத்து நித்திய ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை மஹா பூா்ணாஹுதி, ஹோம பூஜைகள் தொடா்ந்து பம்பை உடுக்கை, மேள தாளங்கள் முழங்க கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு சிலை விமானத்தை அடைந்தது.

தொடா்ந்து முனீஸ்வரா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், புனித நீா் ஊற்றப்பட்டு, மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், பாலாபுரம், சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முனீஸ்வரா் சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முனீஸ்வரா் சிலை அமைப்பு குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனைய கட்டுமான நிறைவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் அதிகரித்துக்கொண்டே வரும் போக்குவரத்து நெர... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூா்!

மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் திகழ்கிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி நகரத்தில் தன்னாா்வலா்கள், நமது திருத்தணி, தூய்மை திருத்தணி என்ற அமைப்பை தொடங்கியுள்ளனா். இ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

திருத்தணி முருகன் கோயிலில் தொடா் விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மலைக் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மா... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன பொதுக்கூட்டம்

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் சனிக்கிழமை இரவு கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க