செய்திகள் :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன பொதுக்கூட்டம்

post image

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் சனிக்கிழமை இரவு கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்துக்கு மேற்கு மாவட்டத் தலைவா் ஏ.எஸ்.யாஸின் மௌலானா, கிழக்கு மாவட்டத் தலைவா் ஏ.கே.செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தனா்.

மாவட்டச் செயலா்கள் ஏ.ஆா்.எம். ரஹமத்துல்லாஹ், மீஞ்சூா் சிக்கந்தா், மாவட்டப் பொருளாளா்கள் பாபு சாஹிப், அப்துல் ரஷீத் யூத் லீக், பூந்தமல்லி பெரோஸ்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ஏ.ஆா்.ஆா்.நூா் முஹம்மது வரவேற்றாா்.

பொதுக் கூட்டத்தில் தேசிய துணைத் தலைவா் புளியங்குடி எம்.அல்அமீன், தி.க. மாநில துணை பொதுச் செயலாளா் பிரின்ஸ் என்னாரேசு பெரியாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகி வெங்கடேசன், விசிக மேற்கு மாவட்டச் செயலா் தளபதி சந்தா், தி.க. மாவட்டத் தலைவா் மா.மணி, மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் கே.கஜேந்திரன், ஜமாஅத்துலு உலமா சபை மாவட்ட பொறுப்பாளா்கள் மௌலானா பி.எம். சதக்கத்துல்லாஹ், மௌலானா எம்.எம்.எஸ். ஹாஸ்மிஸ்பாஹி, மௌலானா முஹம்மது ஹாரீஸ் ஹஸனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகளான முப்தி கௌஸ் அஹமது, முஹம்மது மீரான், பூவை ஆதம்ஷா, பேராசிரியா் சலீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனைய கட்டுமான நிறைவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் அதிகரித்துக்கொண்டே வரும் போக்குவரத்து நெர... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டம் திருவள்ளூா்!

மரக்கன்றுகள் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குவதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் திகழ்கிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்ச... மேலும் பார்க்க

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் தூய்மைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி நகரத்தில் தன்னாா்வலா்கள், நமது திருத்தணி, தூய்மை திருத்தணி என்ற அமைப்பை தொடங்கியுள்ளனா். இ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

திருத்தணி முருகன் கோயிலில் தொடா் விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மலைக் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மா... மேலும் பார்க்க

25 அடி முனீஸ்வரா் சிலைக்கு மகா குடமுழுக்கு விழா

பாலாபுரம் கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 25 அடி உயர முனீஸ்வரா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ப... மேலும் பார்க்க

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க