செய்திகள் :

``450 நாள் ரெக்கார்டை பிரேக் செய்து, செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் இருப்பார்'' - வினோஜ் செல்வம்

post image

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டு நிகழ்வில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம் கலந்துகொண்டு பேசுகையில்,

புதுக்கோட்டை நிகழ்ச்சியில், வினோஜ் செல்வம்
புதுக்கோட்டை நிகழ்ச்சியில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம்

அதிமுக - பாஜக கூட்டணி

"அதிமுக - பாஜக கூட்டணி என்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக இயற்கையாக அமைந்த கூட்டணி. வருகின்ற 2026 -ல் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி வெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

ஏழு கோடி தமிழர்களின் நன்மைக்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். 

அ.தி.மு.க 5 முறை ஆட்சியில் இருந்த கட்சி. அதே போல், பா.ஜ.க 3 முறையாக மத்தியில் ஆளுகின்ற ஒரு மாபெரும் கட்சி. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்திருப்பது தி.மு.க-வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை நிகழ்ச்சியில், வினோஜ் செல்வம்
புதுக்கோட்டை நிகழ்ச்சியில், வினோஜ் செல்வம்

பல்வேறு புரளிகளை கிளப்பி விட்டு இந்தக் கூட்டணி உடைக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக சென்று தி.மு.க-வினர் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் வருவதற்கு முன்பாக தி.மு.க-விலிருந்து எத்தனைக் கட்சிகள் உடைந்து வெளியேறும் என்று பார்க்கத்தான் போகிறோம்.

அமைச்சர் பொன்முடி பேச்சு

தி.மு.க-வினர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் படுக்க வெச்சா, நிக்க வச்சா வாய் தவறி பேசவில்லை. வன்மத்தோடு தான் பேசி வருகிறார்கள். அவர்கள் திராவிட தீவிரவாதியாக உள்ளனர்.

அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக, அவரது தொகுதியான திருக்கோவிலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

புதுக்கோட்டை நிகழ்ச்சியில், வினோஜ் செல்வம்
புதுக்கோட்டை நிகழ்ச்சியில், வினோஜ் செல்வம்

அமைச்சர் செந்தில் பாலாஜி

தி.மு.க-வின் கடைசி பத்தாண்டு கால ஆட்சி எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிவிட்டு செல்லட்டும். அதன் பிறகு, திகாரா, புழலா என்று நீதிமன்றங்கள் முடிவு செய்யும். 

ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி 450 நாள்கள் சிறையில் இருந்தார். டாஸ்மாக் ஊழலில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. மீண்டும் அவர் ரெக்கார்டை அவரே பிரேக் செய்யும் வகையில் அதிக நாட்கள் சிறையில் இருப்பார்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மாநில சுயாட்சி: அரசியல் செய்வது DMK-வா? BJP-அ? | Aazhi Senthilnathan Interview | MK Stalin | Modi

மாநில சுயாட்சி தமிழக அரசியலில் மீண்டும் விவாதமாகியிருக்கிறது. மாநில சுயாட்சி அரசியலை திமுக இப்போது முன்னெடுக்க காரணம் என்ன? அரசியல் செய்வது யார் என்பது குறித்து பதிலளிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் ஆழி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால் TB நோய் வருமா?

Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால், நுரையீரல் தொற்று ஏற்படுமா... சாதா தண்ணீர் குடித்தால், தாகம் அடங்குவதில்லை. அதனால், தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் வாட்டரை குடித்துவருகிறேன். திடீரென்று நுரையீரல... மேலும் பார்க்க

``மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எடுத்த முயற்சி, நாடு முழுவதும் எதிரொலிக்கும்..'' - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் தி.மு.க விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் பள்ளிக்... மேலும் பார்க்க

``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது என்ன?

கும்ப மேளாவில் நடக்கவிருந்த அரசியல் குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது, "கும்பமேளாவில் ... மேலும் பார்க்க

Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?

பாடி பாசிட்டிவிட்டி அனைவரும் அறிந்ததுதான். என் உடல் எப்படியிருந்தாலும் அதை நான் நேசிப்பேன், கொண்டாடுவேன் என்பதுதான் பாடி பாசிட்டிவிட்டி. தற்போது 'பாடி நியூட்ராலிட்டி'யும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. உ... மேலும் பார்க்க