செய்திகள் :

OLO: மனிதர்கள் இதுவரை பார்த்திராத நிறத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் - எப்படி தெரியுமா?

post image

யாரும் இதுவரை பார்த்திராத ஒரு புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கண்களில் லேசர் துடிப்புகள் செலுத்தி இந்த புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டுமே விழித்திரை லேசர் மூலம் புதிய நிறத்தை பார்த்துள்ளனர்.

சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிட்ட தகவலின் படி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய நிறத்தை ஓலோ (OLO) என்று அழைக்கின்றனர். இந்த நிறம் நீல - பச்சை, ஒரு வகையான மயில் நீலம் போன்று இருப்பதாக விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, ``நான் பார்க்கும் நிறம் வெறும் நிறமல்ல, அது ஒரு பதிப்பு. இந்த நிறத்தை இதற்கு முன்பு யாரும் கண்டிருக்க மாட்டார்கள். மானிட்டர்களில் இந்த நிறத்தை வெளிப்படுத்த எந்த வழியும் இல்லை.

இந்த புதிய நிறமான ஓலோவின் அனுபவத்தை விழித்திரையில் மட்டுமே கையாள முடியும். எந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களிலோ அல்லது டிவிகளிலோ புதிய நிறமான ஓலோவைப் பார்க்கப் போவதில்லை.

மேலும் இது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் தொழில்நுட்பத்திற்கு மிக மிக அப்பாற்பட்டது” என்று புதிய நிறம் பார்த்த அனுபவம் குறித்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த வார கேள்விகள்!

விவாதப்பொருளான உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, அடுத்த இந்திய தலைமை நீதிபதி, தொடங்கிய மீன்பிடித் தடைக்கலாம், ஐ.பி.எல், சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட டிரெய்லர் ரிலீஸ் எனப் பல நிக... மேலும் பார்க்க

"இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள்" -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

மும்பையில் அடிக்கடி மராத்தியர் மற்றும் குஜராத்தியர் இடையே சிறு சிறு தகராறு ஏற்படுவதுண்டு. குஜராத்தியர்கள் வசிக்கும் கட்டிடங்களில் மராத்தியர்களுக்கு வீடு விற்பனை செய்வது கிடையாது.அப்படியே இரு தரப்பினரு... மேலும் பார்க்க

மனித விந்தணுக்களுக்கு இடையே நடைபெறும் பந்தயம் - இந்த `Sperm Race’ எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

உலகில் முதன்முறையாக விந்தணுக்களுக்கு இடையே பந்தயம் நடைபெற உள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான ரேஸில் மனிதர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை, விந்தனுக்கள் தான் ஈடுபடுகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்... மேலும் பார்க்க

”கைதிகளுடன் தனிமையில் இருக்கலாம்...” - சிறையில் திறக்கப்பட்ட ”பாலியல் அறை” - எங்கே தெரியுமா?

இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய உம்ப்ரியா பகுதியில் உள்ள சிறையில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது பெண் துணைவியுடன் தனிப்ப... மேலும் பார்க்க

`இது என் தாயார் விருப்பம்’ - 60 வயதில் கட்சி பெண் நிர்வாகியை மணந்த பாஜக மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க தலைவராக இருப்பவர் திலிப் கோஷ். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பெருமை திலிப் கோஷிற்கு உண்டு. 60 வயதாகும் திலிப் கோஷ் தனது ச... மேலும் பார்க்க