செய்திகள் :

மும்பை: வாகனங்களுடன் வாள் வீச்சு சண்டை; ரகளை செய்த சிறுவரை வளைத்துப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?

post image

மாநகராட்சி பேருந்து

மும்பை பாண்டூப் பகுதியில் மாநகராட்சி பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிறுவர் கையில் வாளுடன் பேருந்தைத் தடுத்து நிறுத்தினார்.

அவர் பேருந்து முன்பு நின்று கொண்டு வாளால் மிரட்டினார். பேருந்து நின்றதும் வாளால் பேருந்தின் முன் கண்ணாடியைத் தாக்கி சேதப்படுத்தினார்.

அதோடு பேருந்து ஓட்டுநரையும் தாக்கி திட்டினார். அந்த சிறுவர் நடத்திய தாக்குதலைப் பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

ஆனால் யாரும் அதனைத் தடுக்க முன்வரவில்லை. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றன.

கண்ணாடி சேதம்

16 வயது சிறுவர் பேருந்தைத் தாக்கி விட்டு அருகில் நின்ற ஆட்டோ மற்றும் டேங்கர் லாரியையும் தாக்கி கண்ணாடியைச் சேதப்படுத்தினார்.

பேருந்து தாக்கப்பட்டதில் ரூ.70 ஆயிரம் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து சிறுவரைப் பிடித்துச் சென்றனர். அவருக்கு 16 வயது என்பதால் சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்குப்பதிவு

அவரிடம் போலீஸார் விசாரித்ததில் வீட்டில் அவரது சித்தப்பா சிறுவர் மீது திருட்டு குற்றச்சாட்டுச் சுமத்தி இருக்கிறார். இதனால் அவருடன் சண்டையிட்டுக்கொண்டு கோபத்தில் வீட்டிலிருந்த வாளை எடுத்துக்கொண்டு தெருவிற்கு வந்து கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கி இருப்பது தெரிய வந்தது.

அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தியது, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னையில் மனைவி கண் முன் வெட்டி கொல்லப்பட்ட 'ஏ பிளஸ் ரௌடி' ராஜ்

சென்னை மணலி சின்ன சேக்காடு வேதாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் ராஜ் என்கிற தொண்டை ராஜ் (40).இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலைய 'ஏ பிளஸ்' ரௌடி. இவர் கடந்த 20-ம் தேதி மாலை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் மெ... மேலும் பார்க்க

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த இளைஞர் எரித்துக் கொலை; நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (வயது 26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இருவருக்கும் இன்னும் திருமணம்... மேலும் பார்க்க

விருதுநகர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவவீரர்; விரட்டி பிடித்த மக்கள்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்து சென்ற‌ மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமம் வழங்க ரூ.3,000 லஞ்சம்; துப்புரவு ஆய்வாளருக்கு 11 வருடம் கழித்து 2 ஆண்டுகள் சிறை

கரூர் தான்தோன்றிமலையில் ரமேஷ்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இதற்கு உரிமம் பெற கடந்த 2014 - ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கரூர் நகராட்சியில் தான்தோன்றிமலை பிரிவு துப்புரவு ஆய்வாளரக அப்போது பணியாற்றி... மேலும் பார்க்க

திருச்சி: 'சாக்கடை கலந்த குடிநீரா, திருவிழா அன்னதானமா?' - மூன்று பேர் பலியும், அதிர்ச்சி பின்னணியும்

திருச்சி, உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனால் , இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 3 பேர் மர்மமான ம... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்து ஊழியா் பலி - திருச்சியில் சோகம்

திருச்சி, திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சாா்பில் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்ற விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க