செய்திகள் :

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

post image

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடியது. இன்று பேரவையில், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கிய அறிவிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்கவும் தமிழகம் முழுவதும் மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் புதிதாக 25 போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பேரவையில் இன்று அமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கட்டணமின்றி எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்புப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையளிக்க நடவடிக்கை.

டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும்.

கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம் நிறுவப்படும்.  

4-ஆவது பொது சுகாதார சர்வதேச மாநாடு சேலத்தில் நடத்தப்படும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்ய 6 அரசு மருத்துவமனைகளில் பாலூட்டும் மேலாண்மை அலகு நிறுவப்படும்.

மக்கள் தொகைக்கேற்ப கிராமங்களிலும் நகரங்களிலும் 642 புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் ரூ.137 கோடியில் 300 துணை சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டப்படும் ஆகிய பல்வேறு அறிவிப்புகள் மக்கள் நல்வாழ்வுத் துறை தரப்பிலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை; ஆனால் பிற மாநிலங்களில்..? மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கேள்வி

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கும்போது, பிற மாநிலங்களில் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறதென தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழ... மேலும் பார்க்க

காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைய... மேலும் பார்க்க

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்: விஜய்

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஜப்பானில் கனிமொழி - நெப்போலியன் சந்திப்பு!

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார். நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடக்கம்!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க