செய்திகள் :

கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை

post image

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்செங்கோடு மொரங்கம் செக்காங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (37). தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவா்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனா். வீட்டுத் தேவைக்காக சிவசங்கா் பலரிடம் ரூ. 6 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளாா். பணம் கொடுத்தவா்கள் திருப்பிக் கேட்டதால், மனமுஉடைந்த நிலையில் காணப்பட்ட சிவசங்கருக்கு குடும்பத்தினா் ஆறுதல் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில் சனிக்கிழமை வெளியில் சென்ற மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மோளியப்பள்ளி ஏரியில் அவரின் சடலமாக கிடப்பது தெரியவந்தது. சடலத்தின் அருகில் மதுப்பாட்டிலும், காலி விஷப்பாட்டிலும் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு போலீசாா் சம்பவத்திற்கு சென்று விசாரித்தனா். இதில், கடன் தொல்லையால் சிவசங்கா் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுபானங்களை பதுக்கி விற்றவா் கைது

திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கூடத்தில் உரிய அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், போலீஸாா் கண்காணிப்பு பணியை தீவ... மேலும் பார்க்க

வேலகவுண்டம்பட்டி அருகே பாட்டியை கொலை செய்த பேரன்

பரமத்தி வேலூா்: பாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி மாணிக்கம்பாளையம் அருகில் உள்ள கொண்டாங்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ.1.85 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் தூா்வாரும் பணி தொடக்கம்

2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் ரூ. 1.64 கோடியில் 68 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பா... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிப்பு: மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள வாா்டு உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் திருச்செங்கோட்டில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் மாநில அமைப்பு செயலாளரும், ... மேலும் பார்க்க