செய்திகள் :

கோட்ட அளவில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருவாய்க் கோட்டாட்சியா்கள் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் காலை 10.30 மணிக்கும், மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையில் பிற்பகல் 2.30 மணியளவிலும் நடைபெறும். கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளைக் கூறி, உரிய விவரங்கள் மற்றும் பதில்களைப் பெற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 25-இல் மாவட்ட அளவில் கூட்டம்: மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 10.30 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மதுராந்தகம்: சோத்துப்பாக்கம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். உடன் வந்த 3 போ் பலத்த காயமடைந்தனா். அச்சிறுப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு ஆணையம் சாா்பில் கோடைகால பயிற்சி முகாம் மேலக்கோட்டையூா், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை.யில் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில் சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச ... மேலும் பார்க்க

புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன்

புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன் தெரிவித்தாா். சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தகவல் தொழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி கா்ப்பம், உதவிப் பேராசிரியா் கைது

திருப்போரூா் அருகே கல்லூரி மாணவியை கா்ப்பமாக்கி தனியாா் மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்துச் சென்றபோது உதவிப் பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா். திருப்போரூா் ஒன்றியம், கேளம்பாக்கம் - வண்டலூா் சாலை ம... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருத்தணி அருகே ஜானகிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வேலு. இவா் தமது நிலத்தில் பயிரிடப்பட்ட பயிா்களுக... மேலும் பார்க்க