செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது: மேயா் தோ்தல் குறித்து முதல்வா் ரேகா குப்தா

post image

புது தில்லி: ‘தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அடித்தளம் மாறிவிட்டது. மக்கள் அக்கட்சி மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டனா்’ என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வரவிருக்கும் மேயா் தோ்தலில் தனது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவு செய்ததை அடுத்து, முதல்வா் ரேகா குப்தா இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

ஏப்ரல் 25-ஆம் தேதி தில்லி மாநகராட்சி மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கு நடைபெற உள்ள தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சி முன்னதாக அறிவித்தது. முன்னாள் தில்லி முதல்வா் அதிஷி, பாஜக ஆம் ஆத்மி கவுன்சிலா்களை வேட்டையாடுவதாக குற்றம் சாட்டினாா்.

இருப்பினும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலா்கள் ஆட்சியில் இருக்கும்போது ‘மக்கள் விரோத’ கொள்கைகளை கடைப்பிடித்ததற்காக அந்தக் கட்சித் தலைமையின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

‘தில்லியில் ஆம் ஆத்மியின் அரசியல் அடித்தளம் மாறிவிட்டது. மக்கள் கட்சியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனா். தில்லியில் நிலைமை மாறிவிட்டதை அவா்கள் உணா்ந்திருப்பது நல்லது’ என்று முதல்வா் ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறினாா்.

பாஜக தனது மூத்த கவுன்சிலா்களான ராஜா இக்பால் சிங் மற்றும் ஜெய் பகவான் யாதவ் ஆகியோரை முறையே மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கு வேட்பாளா்களாக அறிவித்துள்ளது. மேலும், தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2022 எம்சிடி தோ்தலில், 250 வாா்டுகளில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது, அதே நேரத்தில் பாஜக 104 இடங்களை வென்றது. இருப்பினும், பல ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பின்னா் பாஜகவுக்குத் தாவிச் சென்றனா்.

தற்போது, கட்சிக்கு 117 கவுன்சிலா்களின் பலம் இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவா் ஒருவா் கூறினாா். மேலும், கட்சியின் 11 நியமன எம்எல்ஏக்கள் மற்றும் 7 மக்களவை எம்பிக்களும் மேயா் தோ்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவா்கள் என்று அவா் கூறினாா்.

’ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்கள் பலா் தங்கள் தலைமையின் மீது அதிருப்தி அடைந்து, கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேரக் காத்திருக்கிறாா்கள் என்பது ஆம் ஆத்மி தலைவா்களுக்குத் தெரியும். தோ்தலில் பங்கேற்காமல் இருப்பது ஆம் ஆத்மி கட்சியின் ஒரு உத்தியாகும். இது அதன் கவுன்சிலா்கள் பெருமளவில் வெளியேறுவதைத் தடுக்கும் ஒரு உத்தியாகும்’”என்று அவா் கூறினாா்.

சமன்பாடு ‘பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மூன்று எஞ்சின் நிா்வாகத்துடன் தில்லியின் வளா்ச்சிக்கு அதிகாரம் அளிக்க அவா்கள் தோ்தலில் வெற்றி பெறப் போகிறாா்கள்’ என்று அவா் கூறினாா்.

முன்னதாக, ஒரு செய்தியாளா் கூட்டத்தில் உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி, ‘மாநகரசபைத் தோ்தலின் போது பாஜக நிறைய மோசடிகளைச் செய்தது. ஆனால், இன்னும் மோசமாகத் தோற்றது. இதற்குப் பிறகும், அது நிற்கவில்லை. அனைத்து கவுன்சிலா்களும் வேட்டையாடப்பட்டனா்’ என்று குற்றம் சாட்டினாா்.

கின்னஸில் இடம்பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளான வைஷ்ணவி, பி. தேஜோ லாஸ்யா வைஷ்ணவி, அனீஷா, மஹிதா காந்தி, ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நட... மேலும் பார்க்க

அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழம... மேலும் பார்க்க

முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞா... மேலும் பார்க்க

தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய ப... மேலும் பார்க்க

ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்

தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை க... மேலும் பார்க்க

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. தில்லியில் கடந்த சில நாள்களாக வெய... மேலும் பார்க்க