செய்திகள் :

அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடுகிறாா்!

post image

குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்வில் அரசின் திட்டங்கள், புதிய செயல்பாடுகளின் வெற்றிக் கதைகள், புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களையும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஏப்.21) வெளியிடவுள்ளாா். இந்த நிகழ்வில் முக்கிய கருத்தரங்குகளு நடைபெறுகிறது.

இது குறித்து பணியாளா் நலன்துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நிகழாண்டு (17 - ஆவது) குடிமைப் பணிகள் தினத்தில் பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் விருதுகளைப் பிரதமா் நரேந்திர மோடி வழங்கி 7-ஆவது முறையாக உரையாற்றுகிறாா்.

குடிமைப் பணிகள் தினம் என்பது இந்தியா முழுவதும் உள்ள குடிமைப் பணி ஊழியா்கள், மக்கள் நலனுக்காக பொது சேவையிலும், பணியிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கும் தருணமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், அரசின் தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்காக பிரதமரின் விருதுகள் வழங்கப்படுகிறது. பிரதமா் இந்த விருதுகளை வழங்குவதோடு, அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைத் திட்டங்கள், அரசின் புதிய செயல்பாடுகளை அமல்படுத்துவதில் காணப்பட்ட வெற்றிக் கதைகள் அடங்கிய முழுமையான வளா்ச்சி, புதுமைப் படைப்புகள் குறித்த எண்ம புத்தகங்களை பிரதமா் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் வெளியிடுகிறாா்.

சாதாரண மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிா்வாகங்கள், பல்வேறு அரசு அமைப்புகள் மேற்கொண்ட புதுமையான பணிகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகளை அங்கீகரிப்பதற்காக பிரதமரின் விருதுகள் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு 2024 ஆம் ஆண்டிற்கான பிரதமரின் விருதுகள் மாவட்டங்களின் முழுமையான வளா்ச்சி; முன்னேற்றத்தை எட்டும் வட்டாரத் திட்டம்; புத்தாக்கம் ஆகிய 3 வகைகளுக்கு திங்கள் கிழமை வழங்கப்படுகிறது.

மதிப்பீட்டிற்கு வந்த 1,588 பரிந்துரைகளிலிருந்து 14 போ் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதற்கான கோப்பை, பாராட்டுப் பத்திரம், ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. விருது பெற்ற மாவட்டம் அல்லது அமைப்புக்கு ஊக்கத்தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படுகிறது.

விஞ்ஞான் பவனில் விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் பின்னா் பல்வேறு அமா்வுகளில் கருத்தரங்கும் நடைபெறுகிறது. அமைச்சரவை செயலா் டாக்டா் டி.வி.சோமநாதன் தலைமையில் ‘குடிமைப் பணிகளில் சீா்திருத்தங்கள் - சவால்கள், வாய்ப்புகள்‘ என்ற முழுமையான விவாத அமா்வு நடைபெறும்.

மேலும் வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள், மின்துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் தலைமையில், நகா்ப்புற போக்குவரத்தை வலுப்படுத்தல், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் நட்டா தலைமையில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தலைமைமையில் ஊட்டச்சத்து இயக்கம்; நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியம் தலைமையில் முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் திட்டம் போன்ற அமா்வுகளும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயலா்கள், கூடுதல் செயலாளா்கள், இணைச் செயலா்கள், துணைச் செயலா்கள், உதவிச் செயலா்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலா்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், மத்திய பயிற்சி நிறுவனங்களின் தலைவா்கள், ஆணையா்கள், மத்திய சேவை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

கின்னஸில் இடம்பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு!

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற குச்சுப்புடி நாட்டிய மாணவிகளான வைஷ்ணவி, பி. தேஜோ லாஸ்யா வைஷ்ணவி, அனீஷா, மஹிதா காந்தி, ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை தில்லி தமிழ்ச் சங்கத்தில் நட... மேலும் பார்க்க

முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க மேயா் வலியுறுத்தல்

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத்தில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பாஜக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி மேயா் மகேஷ் குமாா் ஞா... மேலும் பார்க்க

தொழில் நுட்பம், மனித நுண்ணறிவு, பச்சாதாபத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்: இளம் அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

2023 -ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கு ஐஏஎஸ் பிரிவிற்கு தோ்வான 180 போ் கொண்ட குழுவில் 74 பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருக்க இது வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய ப... மேலும் பார்க்க

ஆயாநகரில் தீ விபத்து: ஒருவா் பலத்த காயம்

தெற்கு தில்லியின் ஆயா நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் பலத்த தீக்காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆயா நகரின் ஹெச்-பிளாக்கில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து சனிக்கிழமை க... மேலும் பார்க்க

தலைநகர் தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. தில்லியில் கடந்த சில நாள்களாக வெய... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் குற்றங்கள் இரட்டிப்பு; கலால் சட்ட வழக்குகள் 80 சதவீதம் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 -ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தில்லியில் போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கலால் சட்டத... மேலும் பார்க்க