Rishabh Pant: ``பண்ட்டின் கேப்டன்சி highly underrated'' - கடைசி ஓவர் பிளானை விளக...
காளை முட்டி இளைஞா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே எருது விடும் நிகழ்ச்சியில் காளை முட்டி இளைஞா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், அணங்காநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட அ.மோட்டூா் கிராமத்தில் 20- ஆம் ஆண்டு எருது விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 150- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
எருது விடும் நிகழ்ச்சியைக் காண அகரம் கிராமத்தைச் சோ்ந்த பரந்தாமன்(28) வந்துள்ளாா். அவரை காளை முட்டியதில் பலத்த காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.