செய்திகள் :

கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி! என்ன நடந்தது?

post image

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சொத்துப் பிரச்னைக் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சமையறையில் இருந்த இரண்டு கத்தியால் ஓம் பிரகாஷை அவரது மனைவி பல்லவி குத்திக் கொன்றதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்களுடன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.

ஓம் பிரகாஷ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி பல்லவி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், படுகாயங்களுடன் வீட்டின் தரைத்தளத்தில் உயிரிழந்து கிடந்த ஓம் பிரகாஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்தது என்ன?

பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் மூன்று மாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் ஓம் பிரகாஷ் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு அருந்துவதற்காக ஓம் பிரகாஷும் அவரது மனைவி பல்லவியும் தரைத்தளத்துக்கு வந்துள்ளனர்.

அப்போது, சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சமையறையில் இருந்த இரண்டு கத்திகளை எடுத்து ஓம் பிரகாஷின் கழுத்து மற்றும் தலையின் பின்புறத்தில் பல்லவி குத்தியுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே ஓம் பிரகாஷ் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி 112 அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மூத்த அதிகாரிகள், பல்லவியிடம் வாக்குமூலம் பெற்று அவரைக் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, சம்பவத்தின்போது ஓம் பிரகாஷின் மகள் மூன்றாவது மாடியில் இருந்துள்ளார். இருப்பினும், அவருக்கும் கொலைக்கு தொடர்பு இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஓம் பிரகாஷின் மகனுக்கு காவல்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் முறைப்படி புகார் அளித்தவுடன், அதிகாரப்பூர்வ தகவல்களை காவல்துறையினர் வெளியிடவுள்ளனர்.

பல்லவியிடம் காவல்துறை மூத்த அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

முன்னாள் டிஜிபி கொலை: விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்- கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் வருகைதந்திருக்கும் அவரது மூன்று குழந்தைகளும் பாரம்பரிய உடை அணிந்துள்ளனர்.நான்கு நாள்கள் பயணமாக இந்தியா வருகைதந்துள்ள அமெரிக்க து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரப் பள்ளிகளில் ஹிந்தி சேர்ப்பு: மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு!

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆ... மேலும் பார்க்க

இந்திய தேர்தல் முறையில் தவறு இருக்கிறது: ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அ... மேலும் பார்க்க

தில்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர்!

நான்கு நாள்கள் பயணமாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தில்லி வந்தடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் அவருடன் இந்தியா வந்துள்ளனர்.தில்லி பாலம் விமான நில... மேலும் பார்க்க

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுத... மேலும் பார்க்க