செய்திகள் :

தூத்துக்குடி: மதுபாட்டிலை மறைத்து வைத்த தோழி; ஆத்திரத்தில் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்!

post image

தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையைச் சேர்ந்தவர் ஜெபா வைலட். இவர், தன் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருடம் திருமணம் ஆகியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்காவிற்கு வந்த போது மாரிக்கனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இவர் திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர்.

ஜெபா வைலைட்

இந்த நிலையில், மாரிக்கனி, ஜெபா வைலைட்டை தான் வசித்து வரும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஜெபா வைலைட், மாரிக்கனி வைத்திருந்த ஒரு மது பாட்டிலை மறைத்து வைத்தாகச் சொல்லப்படுகிறது.

மாரிக்கனி, மதுபாட்டிலைக் கேட்டுள்ளார். ஜெபா வைலைட் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மாரிக்கனி, வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையால்  சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெபா வைலைட் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், மாரிக்கனி ஜெபாவைலைட்டை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தவறி கீழே விழுந்துவிட்டதாகச் சொல்லி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும் மாரிக்கனியின் முன்னுக்குப்பின் முரணான பேச்சினால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், போலீஸாருக்கு தகவல் கூறினர். மாரிக்கனியிடம் நடத்திய விசாரணையில் கட்டையால் தாக்கியதை ஒப்புக்கொண்டார்.

அவர் மீது கொலை  முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். பின்னர் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மாரிக்கனி மீது ஏற்கெனவே  திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இரண்டு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இச்சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னையில் மனைவி கண் முன் வெட்டி கொல்லப்பட்ட 'ஏ பிளஸ் ரௌடி' ராஜ்

சென்னை மணலி சின்ன சேக்காடு வேதாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் ராஜ் என்கிற தொண்டை ராஜ் (40).இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலைய 'ஏ பிளஸ்' ரௌடி. இவர் கடந்த 20-ம் தேதி மாலை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் மெ... மேலும் பார்க்க

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த இளைஞர் எரித்துக் கொலை; நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (வயது 26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இருவருக்கும் இன்னும் திருமணம்... மேலும் பார்க்க

விருதுநகர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவவீரர்; விரட்டி பிடித்த மக்கள்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்து சென்ற‌ மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

மும்பை: வாகனங்களுடன் வாள் வீச்சு சண்டை; ரகளை செய்த சிறுவரை வளைத்துப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?

மாநகராட்சி பேருந்துமும்பை பாண்டூப் பகுதியில் மாநகராட்சி பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிறுவர் கையில் வாளுடன் பேருந்தைத் தடுத்து நிறுத்தினார்.அவர் பேருந்து முன்பு நின்... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமம் வழங்க ரூ.3,000 லஞ்சம்; துப்புரவு ஆய்வாளருக்கு 11 வருடம் கழித்து 2 ஆண்டுகள் சிறை

கரூர் தான்தோன்றிமலையில் ரமேஷ்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இதற்கு உரிமம் பெற கடந்த 2014 - ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கரூர் நகராட்சியில் தான்தோன்றிமலை பிரிவு துப்புரவு ஆய்வாளரக அப்போது பணியாற்றி... மேலும் பார்க்க

திருச்சி: 'சாக்கடை கலந்த குடிநீரா, திருவிழா அன்னதானமா?' - மூன்று பேர் பலியும், அதிர்ச்சி பின்னணியும்

திருச்சி, உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனால் , இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 3 பேர் மர்மமான ம... மேலும் பார்க்க