செய்திகள் :

கருணை, முற்போக்கு சிந்தனையுடன் திகழ்ந்தவர்! போப் பிரான்சிஸ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

post image

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக’ குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையை அக்கறையுடனும் நன்மதிப்புடன் கூடிய முற்போக்கு பாதையில் வழிநடத்தியவர் போப் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிறர் துன்பத்தை தம் துன்பம் போல் எண்ணி இரக்க குணத்துடன் செயல்பட்டவர் என்றும், முற்போக்கு குரலாக ஒலித்தவர் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வு, ஒடுக்கப்பட்டோருக்கு அவர் அளித்த ஆதரவுக்கரம், ‘நீதி, அமைதி, மதங்களுக்கு’ இடையிலான நல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தை ஆகியவை கத்தோலிக்க திருச்சபையை கடந்தும் உலகெங்கிலும் அவருக்கு மரியாதையை பெற்றுத் தந்தது.

செயலில் கருணை மற்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடிக்க பெருவழியை நம்மிடையே அவர் விட்டுச் சென்றுள்ளார் என்று பொருள்பட தமது இரங்கல் செய்தியில் போப் பிரான்சிஸுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் முதல்வர்.

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்: விஜய்

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட... மேலும் பார்க்க

ஜப்பானில் கனிமொழி - நெப்போலியன் சந்திப்பு!

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார். நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடக்கம்!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

5 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று ச... மேலும் பார்க்க