செய்திகள் :

ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள் 5% சரிவு!

post image

புதுதில்லி: ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள், 5 சதவிகிதம் சரிந்து, அதன் லோயர் சர்க்யூட் லிமிட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை 4.98 சதவிகிதம் சரிந்து ரூ.111.65 ஆக இருந்தது. இது அதன் 52 வார குறைந்த நிலையாக பதிவானது.

என்.எஸ்.இ-யில், இது 5 சதவிகிதம் சரிந்து ரூ.110.71 ஆக இருந்தது. இது அதன் லோயர் சர்க்யூட் மற்றும் 52 வார குறைந்த விலையாக பதிவானது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்ச விலையான ரூ.1,125.75 இருந்து, தற்போது 90 சதவிகிதம் சரிந்துள்ளது.

செபி கடந்த வாரம் தனது இடைக்கால உத்தரவின் மூலம், நிறுவன சகோதரர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனீத் சிங் ஜக்கி ஆகியோரை அடுத்த அறிவிப்பு வரும் வரை பங்குச் சந்தைகளை அணுக தடை விதித்தது.

பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்திடமிருந்து நிதியை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையாண்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பெருநிறுவன நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு குறித்த கவலைகளை எழுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

பங்கு விலையை கையாளுதல் மற்றும் ஜென்சோலில் இருந்து நிதியை திசைதிருப்புவது தொடர்பாக ஜூன் 2024ல் புகார் வந்ததையடுத்து, இந்த புகாரை ஆராயத் தொடங்கியது செபி.

இதனையடுத்து ஜென்சோல் இன்ஜினியரிங் அதன் திட்டமிட்டபடி பங்குப் பங்கீடு (stock split) 1:10 என்ற விகிதத்தில் பிரிப்பதை நிறுத்தி வைக்குமாறு செபி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!

பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!

புதுதில்லி: காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், அதன் பங்குகளை, 2 சதவிகிதம் அதிகரித்து, 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றரை வருட காலத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!

மும்பை: டாலர் குறியீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், அதனை தொடர்ந்து உள்நாட்டில் பங்குகளின் தொடர் எழுச்சியால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து ரூ.85.13 ஆக ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஏப். 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தில், கே 13 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன... மேலும் பார்க்க

தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் வலுவான 4-வது ஆண்டு வருவாயால் உந்தப்பட்டு, பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக தங்கள் வெற்றிப் பாதையை ந... மேலும் பார்க்க

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?

ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் வேகமான வாழ்க்கை முறையைக் கொண்ட பயனர்களைக் குறிவைத்து இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத... மேலும் பார்க்க

சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்! உலகில் முதல் நாடு...

உலகில் முதல் நாடாக 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்... மேலும் பார்க்க