செய்திகள் :

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?

post image

ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் வேகமான வாழ்க்கை முறையைக் கொண்ட பயனர்களைக் குறிவைத்து இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஸியோமி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ''குறிப்பிட்ட பயனர்களை இலக்காக வைத்து புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலை நடைப்பயிற்சி, அலுவலக ஆலோசனைக் கூட்டம், அழைப்பு மேலாண்மை உள்ளிட்டவற்றை மேற்கொள்பவர்களுக்காக புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் சிறப்பம்சங்கள்

இந்திய சந்தையில் ரூ. 1,999-க்கு ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கிறது. மே 1, 2025 முதல் நாட்டின் அனைத்து ஸியோமி கிளைகளிலும் இந்த வாட்ச் கிடைக்கும்.

நீலம், கருப்பு, சில்வர், தங்கம் என 4 வண்ணங்களில் ஸ்மார்ட் வாட்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏப். 24ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

இதில் 140+ வொர்க் அவுட் மோட் உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் கண்காணிப்பு துல்லியம் 98.5% இருக்கும் என ரெட்மி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

ஆக்சிஜன் அளவு, அழுத்தம், தூக்கம் போன்றவற்றை கணக்கிட்டுக்கொள்ளலாம்.

1.85 அங்குல திரையுடன் 600nits வெளிச்சம் கொண்டது. இந்த வகை ஸ்மார்ட் வாட்ச் திரை இருளாமல், என்றுமே திரை வெளிச்சத்துடனே இருக்கும்.

அனைத்து கால நிலையிலும் அணிந்துகொள்ளும் வகையிலான பட்டையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் ஓஎஸ் உதவியுடன் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகளை ஸ்மார்ட் வாட்சிலும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாள்களுக்கு முழுப் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படிக்க | குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள் 5% சரிவு!

புதுதில்லி: ஜென்சோல் இன்ஜினியரிங் பங்குகள், 5 சதவிகிதம் சரிந்து, அதன் லோயர் சர்க்யூட் லிமிட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை 4.98 சதவிகிதம் சரிந்து ரூ.111.6... மேலும் பார்க்க

பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!

புதுதில்லி: காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், அதன் பங்குகளை, 2 சதவிகிதம் அதிகரித்து, 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றரை வருட காலத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!

மும்பை: டாலர் குறியீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், அதனை தொடர்ந்து உள்நாட்டில் பங்குகளின் தொடர் எழுச்சியால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து ரூ.85.13 ஆக ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஏப். 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தில், கே 13 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன... மேலும் பார்க்க

தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியின் வலுவான 4-வது ஆண்டு வருவாயால் உந்தப்பட்டு, பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக தங்கள் வெற்றிப் பாதையை ந... மேலும் பார்க்க

சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்! உலகில் முதல் நாடு...

உலகில் முதல் நாடாக 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்... மேலும் பார்க்க