செய்திகள் :

``தண்ணீர் பஞ்சத்தால் இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை.." - தண்ணீரை பூட்டி வைக்கும் கிராமத்தினர்

post image

நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் தான் அதிக பட்ச வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு அமைத்துள்ள குடிநீர் பைப்களில் சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா மக்கள் தண்ணீருக்கு பணத்தை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அகோலா மாவட்டத்தில் உள்ள உக்வா என்ற கிராமத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் பைப்களில் தண்ணீர் வருகிறது. சில நேரங்களில் 45 முதல் 60 நாள் கழித்துதான் பைப்பில் தண்ணீர் வருகிறது. இதனால் உக்வா கிராம மக்கள் தண்ணீர் வரும் போது பெரிய தொட்டிகளில் சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.

அந்த தண்ணீர் ஒரு மாதத்திற்கு தேவை என்பதால் அதிகமான வீடுகளில் தண்ணீர் தொட்டிக்கு மக்கள் பூட்டுப்போட்டுள்ளனர். யாராவது தண்ணீரை திருடிச்சென்றுவிடக்கூடாது என்பதற்காக இது போன்ற முன்னேற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சந்தா என்ற பெண் கூறுகையில்,''எங்களுக்கு பணத்தை விட தண்ணீர் முக்கியமானதாக இருக்கிறது. யாராவது தண்ணீரை திருடிச்சென்றுவிட்டால் நாங்கள் தண்ணீருக்காக அடுத்த இரண்டு மாதம் காத்திருக்கவேண்டும். அல்லது ரூ.600 கொடுத்து டேங்கர் தண்ணீர் வாங்கவேண்டும்'' என்றார்.

இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் தண்ணீர் பிரச்னையால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி இக்கிராமத்திற்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாடு

உள்ளூர் பெண்களே உள்ளூர் ஆண்களை திருமணம் செய்ய மறுக்கின்றனர் என்று அக்கிராம ஆண்கள் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.

ஜூன் இறுதியில் மழை தொடங்கும். அதுவரை இந்த பிரச்னை இருக்கத்தான் செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த சித்ரவதையை அனுபவித்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள தன்காவ் பகுதி பழங்குடியின மக்கள் தண்ணீருக்காக 7 முதல் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கின்றனர்.

வழியில் சில நேரங்களில் பெண்களை பாம்பு கடித்துவிடுகிறது. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் விர் சிங் கூறுகையில்,''தண்ணீருக்காக பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை. மக்கள் அடிபம்பு மூலம் தண்ணீர் எடுக்கின்றனர். அதிலும் தண்ணீர் மிகவும் குறைவாக வருகிறது. இதனால் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கவேண்டிருக்கிறது'' என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Samantha: `ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டுச் செல்வது ஏன்?' - சமந்தா லைக் செய்த வீடியோ

சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ 'டைரி ஆஃப் எ சிஇஓ' என்ற youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டது. அந்த வீடியோவில் 'ஆண்க... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: தன்னை அழைப்பதாக எண்ணி கையைத் தூக்கியவருக்கு ஆப்ரேஷன்; வைரலான சம்பவத்தில் நடந்தது என்ன?

தம் பெயரை அழைத்ததாக கருதி சும்மா கையைத் தூக்கியதற்காக கையில் ஆறு தையல் போட்டப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோடா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல சிறப்பு வசதிகளைக் ... மேலும் பார்க்க

யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்த... மேலும் பார்க்க

Anurag Kashyap: `அனுராக் கஷ்யப் மன்னிப்பு கேட்கவில்லை எனில்..!’ - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே. அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந... மேலும் பார்க்க

தொடரும் மர்மம்: முடி உதிர்ந்து வழுக்கையான கிராமத்தில் நகம் சேதமடைந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷெகாவ் தாலுகாவில் உள்ள நான்கு கிராமங்களில் மக்களின் தலையில் இருந்து திடீரென முடி உதிர ஆரம்பித்தது. மொத்தம் மொத்தமாக முடி உதிர்ந்து ஒட்டுமொத்த தலையே வழுக்கையான... மேலும் பார்க்க

Rs 50-crore dog: "அந்த நாய் ரூ.50 கோடியெல்லாம் இல்லைங்க" - அமலாக்கத் துறை சோதனையில் வெளிவந்த உண்மை

பெங்களூரைச் சேர்ந்த எஸ்.சதிஷ் என்ற நபர் 50 கோடி ரூபாய்க்கு உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச் சேர்ந்த நாயை வாங்கியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அது உல்ஃப் டாக் என்ற (wolfdog) அரிய வகை இனத்தைச்... மேலும் பார்க்க